RSS

Category Archives: Tamil Verses

அழகின் அழகே

அழகின் அர்த்தம் யாரென்று கேட்டால்

                             என் தாயென்று சொன்னேனே

அழகின் மொத்த உருவமாய் உன்னை கண்டதும் 
                             அது நீ மட்டும் தான் என்றேனே 
பால் வண்ண நிலவும் உன்னை கண்டு வெட்கப்  படுதே 
வெண் அன்னமும் உன் அழகிற்கு தலை வணங்குதே 
இந்திரன் நாட்டியக்கரிகள் உன்னிடம் வந்தனரே 
உந்தன் அழகின் ரகசியம் அறிந்து கொள்ள 
மன்மதன் மனைவி ரதி தேவியும் வந்தாள் 
உந்தன் பிரகாசத்தின் ரகிசயம் அறிய 
அப்படி என்னதான் ரகசியம் உள்ளது உன் அழகினில் 
இத்துனை தேவர்கள் வந்து உன்னை யாசிக்கின்றனரே 
உந்தன் காதல் பெற்ற நான் எத்துனை அதிர்ஷ்டசாலி 
இன்று தான் உணர்ந்தேனே எந்தன் அழகின் அழகே 
============================= சுகுமார் ரா 
 
2 Comments

Posted by on April 1, 2013 in Tamil Verses

 

காதலை காதலிக்க

காதலில் விழுந்தேன் என நினைத்தேன்
காதலையே காதலிக்க  ஆரம்பித்தேன்
அப்படி என்னதான் இருக்கிறது உன்னிடம்
அனைவரையும் இழுக்கிறாய் உன் பக்கம்

வைராக்கியம் இருந்தாலும்
தெனாவெட்டு இருந்தாலும்
அழகை கட்டி மயக்குகிறாய்
குணத்தை கட்டி ஈர்த்துகொல்கிறாய்

மக்களை மட்டுமா ஆட்டிவைக்கிறாய்
உயிரினம் அத்துணையும் அல்லவா அடிமை படுத்துகிறாய்
உன்னிடம் தப்பிக்க என்றுமே முடியாது
உனக்கு அடிமை அனால் மீண்டு எழ முடியாது 

 
2 Comments

Posted by on March 28, 2013 in Tamil Verses

 

செந்தாமரை செவ்விதழ்

செந்தாமரை முளைக்குமாம் சேற்றிலும்
செந்தாழம்பூ முள் புதரிலே பூக்குமாம்
செவ்வாழை போல் இனியவளே
செந்தமிழில் கவி படித்து நகைப்பயோ??

வார்த்தைகள் இருக்கின்றன பல கோடி
மகிழ்ந்தார்கள் மக்கள் அதில் கவி பாடி
உன் மேன்மையை சொல்ல சொற்கள் இல்லை
அலைகிறேன் நான் வார்த்தைகளை தேடி

இம்மையிலும் மறுமையிலும்
கலைமகளை எண்ணி தவம் புரிந்தாலும்
உன்னை வர்ணனை செய்யும்
கவிதை கிட்டது போலும்

பொறாமை வருகிறது பிரம்மனிடம்
படைக்கும் ஆற்றல் அவனிடம் மட்டும்
பிரம்மா இவளின் மேல் கவி பாட
ஆற்றல் நீயும் எனக்கு கொடுப்பாயா???

====================================== சுகுமார் ரா

 
2 Comments

Posted by on March 28, 2013 in Tamil Verses

 

அன்னமே தேன் கிண்ணமே

ஓடையோரம் நீ எனக்கு காத்திருக்க
ஓயாது நீரோடை சிலிர்த்துக் கொண்டிருக்க
ஒய்யாரமாய் அன்னங்கள் நீந்தி வர
ஓய்வுக்காய் காத்திருக்கும் உன் கண்கள் அதை ரசிக்க

அவன் எண்ணங்கள் உன் மனதில் ஓட
கண்ணிமைகள் நீரோடயினை கூர்ந்து நோக்க
கால் சலங்கைகள் மெல்லிய ஒழி எழுப்ப
அன்னப்பறவைகள் உன் அழகில் மயங்கி நிற்க

வீர திருமகன் உனக்காக திரும்பி வருகிறான்
வீரத்துடன் போராடி நாட்டுக்கு வெற்றி அளித்தவன்
விவேகத்துடன் எதிரிகளை வீழ்த்தியவன்
வியப்புற்று அனைவரையும் கலங்க செய்தவன்

வெற்றி திருமகளே வாகை சூட
வெற்றிமாறன் என புகழ் கொண்ட
தலைவன் ஓடோடி வருகிறான் கண்ணே
தலைவியை ரசிக்கின்றன அண்ணன்கள் அவள் முன்னே
===============———————=============——————- சுகுமார் ரா 

 
Leave a comment

Posted by on March 26, 2013 in Tamil Verses

 

பார்த்த உடன் பரவசம்

பார்த்த நொடியிலே பரவசமே – உன்
புன்னகை எனக்கு நவரசமே
பொங்குது இருக்கும் காதலெல்லாம்
பூக்குது மனதில் நந்தவனம்

அப்படி என்னதான் இருக்குது உன்னிடம்
அப்படியே ஈர்குது என்னை உன் பக்கம்
அழியா அழகிய ஓவியம் நீ
அதை அடைய நினைக்கும் கலைஞன் நான்

யோசித்து பார்த்தேன் பலமுறைகள்
யோசனைக்கு எட்டவில்லை காரணங்கள்
புலப்படவில்லை எனக்கு மட்டும்
ஏன் இந்த காதல்  மயக்கம் ????

=——-======——=====——-======——- சுகுமார் ரா

 
2 Comments

Posted by on March 22, 2013 in Tamil Verses

 

தனிமையின் தாக்கம்

தனிமையில் இனிமை காண முடியுமோ
தன்னந்தனியாய் வாழ்ந்து வெல்வது சுலபமோ
தவிக்கின்றேன் நான் தனிமையிலே
தாகம் தீர்க்க அவள் இல்லையே

என்னருகில் நீ வரும் வரை
தனிமை தான் என் போர்வை
வந்து சேர்ந்து விடு என்னிடம்
அன்பை கொடுத்து விடு என்னிடம்

காலம் கழிப்பதில் பயனொன்றும் இல்லை
தனித்து வாழ்வதில் சுகம் என்றும் இல்லை
தவிப்பினை அடக்க தேடினேன் அவளை
கண்டு கொள்ள மறுப்பதேனடி?

உன் அறிவிற்கு பதினாயிரம் பேர் சூழலாம்
உன் அழகுக்காக ஆயிரம் பேர் வரலாம்
உந்தன் மனதை தேடி வருபவர் எத்தனை பேரடி?
உன்னை கண்கலன்காது காக்க ஒருவன் தானடி
இந்த பேதை உள்ளம் கொண்ட நானடி ………… சுகுமார் ரா

 
2 Comments

Posted by on March 16, 2013 in Tamil Verses

 

உயிரோவியம்

என்னை கொள்ளும் ஓவியம் நீ
உன்னை கண்டு மயங்கி விழுந்தேன் நான்
எவராலும் வரைய முடியா படம் நீ
கலைமகளை மிஞ்சும் திருமேனி

உலக புகழ் பெற்ற ஓவியங்கள்
உனது அழகை கண்டு தலைவணங்கும்
அதை வரைந்த அதனை ஓவியர்கள்
கலைமகளிடம் சென்று  முறையிடவே

இத்துனை அழகை வரைவதற்கு
எத்துனை பிறவிகள் தவம் தேவை ?
கேள்விகள் கேட்டு துளைத்தெடுக்க
பிரம்மனிடம் செல்ல அவள் கூற
அவரிடம் சென்று முறையிட்டு
வினாக்கள் பல முன்னிறுத்த

ஆக்கும் ஆற்றல் கொண்ட எனக்கு
ஈரேழு பிறவிகள் ஆகியது
நான் படைத்த  உங்களுக்கு
ஈராயிரம் பிறவி ஆகக்கூடும்

பதில் கேட்ட ஓவியர்கள்
திடுக்கிட்டு விழித்தெழுந்து
தவம் புரிய முடிவெடுத்து
கலைமகளிடம் அறிவு கடன் கேட்க
தவக்கோலத்தில் அவர்கள் காத்திருக்க
உன் உயிரோவியத்தை இங்கு நான் ரசிக்க …………….. சுகுமார் ரா

 
6 Comments

Posted by on March 15, 2013 in Tamil Verses

 

கானல் நீர்

காதலும் கானல் நீரும் ஒன்றோ ?
இருந்தும் இல்லாதது போல்
இல்லாதது இருப்பது போல்
ஒன்று சேர காட்சி அளிக்கின்றனவே

தாகம் தீர்க்காது கானல்
தாகத்தை பெருக்கும் காதல்
இரண்டுமே ஒன்று போல
என்றும் வலி கொடுப்பதில்

பாலைவனத்தில் ஏமாற்றும் கானல்
பாலைவன சோலையாய் மலரும் காதல்
பருக முடியாதது கானல்
பகிர பகிர இன்பமளிக்கும் காதல் ———————-சுகுமார் ரா

 
6 Comments

Posted by on March 6, 2013 in Tamil Verses

 

காதல் ரோஜா

ரோஜா மலரின் இதழ் கொண்டவளே
உன்னை அடையும் பாதை முழுதும் முற்கள் ஏன்?

தாழம்பூ வாசம் நிறைந்தவளே
உன்னை சேர ரத்தம் வழிவதேன் ?

இனிமையும் இடுக்கணும் ஒன்றாய்
என் காதல் வழியில் வருவதேன்?

முற்களை தாண்டி வந்த பின்னர்
பாம்பாய் நீ சீருவதேன் ?

மேன்மையும் வாசமும் மென்மையும்
ஒன்றாய் கலந்து உருவானவளே
உன்னை அடைய வழி கூறு
என்னுடன் நீ விரைவாய் சேரு…….. சுகுமார் ரா

 
4 Comments

Posted by on March 5, 2013 in Tamil Verses

 

உன்னை கண்டு

உன்னை  கண்டதும் என்னை நான் புரிந்துகொண்டேன்
உன்னோடு இருக்கையில் வாழ்க்கையை தெரிந்துகொண்டேன்

என்னுடன் வாழ்வை பகிர்ந்துகொள்
உன்  வாழ்வில் மகிழ்வை  நிரப்பிக்கொள்
உயிரும் பொருளுமாய் இருப்பேன் நான்
உன் வாழ்வை  மென்மை ஆக்குவேன்

எதற்கு நீ யோசிக்கின்றாய்
எதற்காக நீ தாமிதிக்கிறாய்
என்னை புரிந்துகொண்ட நீ
ஏன் இவ்வாறு தயங்குகின்றாய்

கலக்கம் என்றும் வேண்டாம்
காதல் ஒன்றே போதும்
என்னை ஏற்றுக்கொண்டால் போதும்
என்றும்  மகிழ்ச்சி நிச்சயம் ……………………………….. சுகுமார் ரா

 
Leave a comment

Posted by on March 5, 2013 in Tamil Verses