Category Archives: Tamil Verses
அழகின் அழகே
காதலை காதலிக்க
காதலையே காதலிக்க ஆரம்பித்தேன்
அப்படி என்னதான் இருக்கிறது உன்னிடம்
அனைவரையும் இழுக்கிறாய் உன் பக்கம்
வைராக்கியம் இருந்தாலும்
தெனாவெட்டு இருந்தாலும்
அழகை கட்டி மயக்குகிறாய்
குணத்தை கட்டி ஈர்த்துகொல்கிறாய்
மக்களை மட்டுமா ஆட்டிவைக்கிறாய்
உயிரினம் அத்துணையும் அல்லவா அடிமை படுத்துகிறாய்
உன்னிடம் தப்பிக்க என்றுமே முடியாது
உனக்கு அடிமை அனால் மீண்டு எழ முடியாது
செந்தாமரை செவ்விதழ்
செந்தாழம்பூ முள் புதரிலே பூக்குமாம்
செவ்வாழை போல் இனியவளே
செந்தமிழில் கவி படித்து நகைப்பயோ??
வார்த்தைகள் இருக்கின்றன பல கோடி
மகிழ்ந்தார்கள் மக்கள் அதில் கவி பாடி
உன் மேன்மையை சொல்ல சொற்கள் இல்லை
அலைகிறேன் நான் வார்த்தைகளை தேடி
இம்மையிலும் மறுமையிலும்
கலைமகளை எண்ணி தவம் புரிந்தாலும்
உன்னை வர்ணனை செய்யும்
கவிதை கிட்டது போலும்
பொறாமை வருகிறது பிரம்மனிடம்
படைக்கும் ஆற்றல் அவனிடம் மட்டும்
பிரம்மா இவளின் மேல் கவி பாட
ஆற்றல் நீயும் எனக்கு கொடுப்பாயா???
====================================== சுகுமார் ரா
அன்னமே தேன் கிண்ணமே
ஓயாது நீரோடை சிலிர்த்துக் கொண்டிருக்க
ஒய்யாரமாய் அன்னங்கள் நீந்தி வர
ஓய்வுக்காய் காத்திருக்கும் உன் கண்கள் அதை ரசிக்க
அவன் எண்ணங்கள் உன் மனதில் ஓட
கண்ணிமைகள் நீரோடயினை கூர்ந்து நோக்க
கால் சலங்கைகள் மெல்லிய ஒழி எழுப்ப
அன்னப்பறவைகள் உன் அழகில் மயங்கி நிற்க
வீர திருமகன் உனக்காக திரும்பி வருகிறான்
வீரத்துடன் போராடி நாட்டுக்கு வெற்றி அளித்தவன்
விவேகத்துடன் எதிரிகளை வீழ்த்தியவன்
வியப்புற்று அனைவரையும் கலங்க செய்தவன்
வெற்றி திருமகளே வாகை சூட
வெற்றிமாறன் என புகழ் கொண்ட
தலைவன் ஓடோடி வருகிறான் கண்ணே
தலைவியை ரசிக்கின்றன அண்ணன்கள் அவள் முன்னே
===============———————=============——————- சுகுமார் ரா
பார்த்த உடன் பரவசம்
புன்னகை எனக்கு நவரசமே
பொங்குது இருக்கும் காதலெல்லாம்
பூக்குது மனதில் நந்தவனம்
அப்படி என்னதான் இருக்குது உன்னிடம்
அப்படியே ஈர்குது என்னை உன் பக்கம்
அழியா அழகிய ஓவியம் நீ
அதை அடைய நினைக்கும் கலைஞன் நான்
யோசித்து பார்த்தேன் பலமுறைகள்
யோசனைக்கு எட்டவில்லை காரணங்கள்
புலப்படவில்லை எனக்கு மட்டும்
ஏன் இந்த காதல் மயக்கம் ????
=——-======——=====——-======——- சுகுமார் ரா
தனிமையின் தாக்கம்
தன்னந்தனியாய் வாழ்ந்து வெல்வது சுலபமோ
தவிக்கின்றேன் நான் தனிமையிலே
தாகம் தீர்க்க அவள் இல்லையே
என்னருகில் நீ வரும் வரை
தனிமை தான் என் போர்வை
வந்து சேர்ந்து விடு என்னிடம்
அன்பை கொடுத்து விடு என்னிடம்
காலம் கழிப்பதில் பயனொன்றும் இல்லை
தனித்து வாழ்வதில் சுகம் என்றும் இல்லை
தவிப்பினை அடக்க தேடினேன் அவளை
கண்டு கொள்ள மறுப்பதேனடி?
உன் அறிவிற்கு பதினாயிரம் பேர் சூழலாம்
உன் அழகுக்காக ஆயிரம் பேர் வரலாம்
உந்தன் மனதை தேடி வருபவர் எத்தனை பேரடி?
உன்னை கண்கலன்காது காக்க ஒருவன் தானடி
இந்த பேதை உள்ளம் கொண்ட நானடி ………… சுகுமார் ரா
உயிரோவியம்
உன்னை கண்டு மயங்கி விழுந்தேன் நான்
எவராலும் வரைய முடியா படம் நீ
கலைமகளை மிஞ்சும் திருமேனி
உலக புகழ் பெற்ற ஓவியங்கள்
உனது அழகை கண்டு தலைவணங்கும்
அதை வரைந்த அதனை ஓவியர்கள்
கலைமகளிடம் சென்று முறையிடவே
இத்துனை அழகை வரைவதற்கு
எத்துனை பிறவிகள் தவம் தேவை ?
கேள்விகள் கேட்டு துளைத்தெடுக்க
பிரம்மனிடம் செல்ல அவள் கூற
அவரிடம் சென்று முறையிட்டு
வினாக்கள் பல முன்னிறுத்த
ஆக்கும் ஆற்றல் கொண்ட எனக்கு
ஈரேழு பிறவிகள் ஆகியது
நான் படைத்த உங்களுக்கு
ஈராயிரம் பிறவி ஆகக்கூடும்
பதில் கேட்ட ஓவியர்கள்
திடுக்கிட்டு விழித்தெழுந்து
தவம் புரிய முடிவெடுத்து
கலைமகளிடம் அறிவு கடன் கேட்க
தவக்கோலத்தில் அவர்கள் காத்திருக்க
உன் உயிரோவியத்தை இங்கு நான் ரசிக்க …………….. சுகுமார் ரா
கானல் நீர்
இருந்தும் இல்லாதது போல்
இல்லாதது இருப்பது போல்
ஒன்று சேர காட்சி அளிக்கின்றனவே
தாகம் தீர்க்காது கானல்
தாகத்தை பெருக்கும் காதல்
இரண்டுமே ஒன்று போல
என்றும் வலி கொடுப்பதில்
பாலைவனத்தில் ஏமாற்றும் கானல்
பாலைவன சோலையாய் மலரும் காதல்
பருக முடியாதது கானல்
பகிர பகிர இன்பமளிக்கும் காதல் ———————-சுகுமார் ரா
காதல் ரோஜா
உன்னை அடையும் பாதை முழுதும் முற்கள் ஏன்?
தாழம்பூ வாசம் நிறைந்தவளே
உன்னை சேர ரத்தம் வழிவதேன் ?
இனிமையும் இடுக்கணும் ஒன்றாய்
என் காதல் வழியில் வருவதேன்?
முற்களை தாண்டி வந்த பின்னர்
பாம்பாய் நீ சீருவதேன் ?
மேன்மையும் வாசமும் மென்மையும்
ஒன்றாய் கலந்து உருவானவளே
உன்னை அடைய வழி கூறு
என்னுடன் நீ விரைவாய் சேரு…….. சுகுமார் ரா
உன்னை கண்டு
உன்னோடு இருக்கையில் வாழ்க்கையை தெரிந்துகொண்டேன்
என்னுடன் வாழ்வை பகிர்ந்துகொள்
உன் வாழ்வில் மகிழ்வை நிரப்பிக்கொள்
உயிரும் பொருளுமாய் இருப்பேன் நான்
உன் வாழ்வை மென்மை ஆக்குவேன்
எதற்கு நீ யோசிக்கின்றாய்
எதற்காக நீ தாமிதிக்கிறாய்
என்னை புரிந்துகொண்ட நீ
ஏன் இவ்வாறு தயங்குகின்றாய்
கலக்கம் என்றும் வேண்டாம்
காதல் ஒன்றே போதும்
என்னை ஏற்றுக்கொண்டால் போதும்
என்றும் மகிழ்ச்சி நிச்சயம் ……………………………….. சுகுமார் ரா