RSS

Category Archives: En Kaadhal

என் காதல்-5

மாற்றங்கள் வந்ததற்கு நானே காரணம்

மதி முழுதுவம் அவளின் மேல் காதல் ஓவியம்

மனதில் உள்ளதை கூற என்னிடம் தாமதம்

மறந்து போனேன் நான் அனைத்தையும்

அவளிடம் பேசுகையில் –

நாழிகைகள் மனிதுலகல் போல கரைந்தன

நான் என்ற எண்ணங்கள் என்னுள் மறைந்தன

நயாகரா போல காதல் அலைகள் பொங்கின 

நடுவில் யாரேனும் அழைத்தல் கோப கனல்கள் எழுந்தன  

அவள் குரல் கேட்காத நேரம் –

கணங்கள் யுகங்கலாயின

காலனின் பாச கயிறுகள் தெரிந்தன

காரணமின்றி கால்கள் நடந்தன

காதலை மறைக்க முயலாது நாடி துடிப்புகள் திணறின

நாட்கள் நகர

எங்கள் மனங்களின் நெருக்கம் கூட

பரிதவிப்பு அடங்க நேசம் நெறைய 

காதல் பெருக இன்ப வெள்ளம் பொங்க

இனிமையாய் எல்லாம் அமைய
காதல் புறாக்கள் பறந்தன

காதலுடன் ஊர் சுற்றி திரிந்தன

தினமும் பார்க்க துடித்தன

எப்பொழுதும் பேசி மகிழ்ந்தன

காதல் கட்டுக்கண்டகாமல் வளர்ந்தது

காதலை சொல்ல மட்டும் முடியாமல் போனது

காலம் விடை சொல்லவும் மறுத்தது

காதல் எங்கள் மனதை வதைத்தது

அவள் தேர்வுகள் நெருங்கின

அவளின் தவ்விபுகள் கூடின – ஒரு பக்கம்

அவளை ஆட்கொண்ட நான் – மறுபக்கம்

அவளின் கடைசி தேர்வுகள் இளங்கலையில்

மனதில் வலி ஒரு பக்கம்

உடலின் வலி மறுபக்கம்

தேர்வுகளுக்கு படிக்கவேண்டிய கட்டாயம் இப்பக்கம்

அவள் என்னத்தான் செய்வாள் அப்பக்கம் !

உதவ முயன்றேன்

நான் அதை கூறினேன் அவளிடம்

மகிழ்ந்தாள் மிகையாக

முத்தமொன்று குடுத்தாள் அன்பளிப்பாக!

அவளுக்கு என் மேல் இருப்பது காதலா?

அவள் குடுத்த முத்தம் அதன் வெளிப்பாடா?

அரும்பும் கேள்விகள் என்னுள்

அதற்கு பதில்கள் தேடவேண்டும் அவள் மனதில்!

தயங்கினேன் நான் அதை கேட்க

தயார்படுத்த வேண்டும் அவள் தேர்வினை எதிர்கொள்ள

தலையாய கடமையாய் நிற்குது என் முன்னே

தடுமாற்றமின்றி முடித்துவிடுவோம் கண்ணே 
படித்தாள் அவள் நன்கு

பயமின்றி எழுதினாள் தேர்வு –

அவள் பக்கமே வரவில்லை மன சோர்வு

பற்றிக்கொண்டது உடல் சோர்வு

கல்லூரி வாழ்வில் கடைசி நாள் –

நண்பர்களுடன் கலந்துரையாடலின் தற்காலிக கடைசி நாள்

காத்திருந்தேன் அவளின் அழைப்பிற்கு கன மனத்துடன்

அவள்- அப்பால் தொடர்பு எல்லைக்கு! பிரியா விடை கொடுத்தாள் நண்பர்களுக்கு

பிரியத்துடன் அழைத்தாள் எனக்கு

பரிதவிப்புடன் சொன்னாள் – “சோர்வு எனக்கு”

பரிதாப நிலையில் எங்கள் மனக்கணக்கு!

நிம்மதியாய் உறக்கத்தில் அவள்

நிம்மதியின்றி தவிப்பில் நான்

நியாயமா இது பிரம்மா தேவா?

நிமிடமாவது நீ இந்த வேதனையை உணர்வாயா?

கன நேரமும் நிம்மதியில்லை –

என்றும் காணாத அன்பு தொல்லை –

அவளையும் குறை சொல்வதற்கில்லை

 நெஞ்சமோ எதையும் கேட்கும் நிலைமையில் இல்லை !

தூக்கமின்றி தவிக்கையில் தோன்றியது ஒரு விதை

நந்தசிவபாலனின் மணிமேகலை உரைநடை கவிதை

எடுத்து வாசிக்க தொடங்கினேன் – மனதில் அரும்பியது

இப்படித்தான் மணிமேகலையும் தவித்தலோ வந்தியதேவனுக்காக??
மணிமேகலையின் காதல் உண்மையோ?

மனத்தவிப்பில் என்னை மிஞ்சியவளோ?

மதி நுட்பத்தில் என்னவளை வெல்வாளோ?

மனத்தால் காதலை பரிமாறுவதில் எங்களை தோற்க்கடிப்பவளோ?

என்ன இது மடத்தனம் ?

எனக்குள் ஏன் இந்த பைத்தியம் ?

என் காதல் ஆகுமோ அழியா சரித்திரம்?

எனக்குள் வருமா நிதானம்?

அலுவலகம் செல்ல நாட்டமில்லை

அலுவலுக்கு செல்லாவிட்டால் சம்பளமில்லை

அலை கடல் போல் என் மனம்

அழைத்தாள் என்னை அலைபேசியில் அக்கணம்!

 
Leave a comment

Posted by on May 2, 2012 in En Kaadhal, Tamil Verses

 

Tags: ,

என் காதல் (தொடர்ச்சி 3)

ஒருபக்கம் அவள் வலி குறைத்த சந்தோசம்
மறுபக்கம் முழுதாய் அவளை கவனித்துகொல்லாத துக்கம்
என்னை விட்டு போனது தூக்கம்
என்றும் தீராது அவளின் மேல் ஏக்கம்

உணவு இறங்கவில்லை
உடல் உறங்கவில்லை
உள்ளே அவள் நினைவலை
ஊன் உள்ளத்திலிருந்து நீங்கவில்லை

அவளிடமிருந்து மறுநாள் செய்தி வந்தது
அதை கேட்டு உள்ளம் இளைப்பாறியது
அவள் கூறியது இனிமையானது
அவளின் வேதனை குறைந்தது

உணவு அப்போதுதான் ருசியாய் தெரிந்தது
உண்ணும் வேகம் கூடியது
ஊரிலிருந்து கிளம்பும் நேரம் வந்தது
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது

அடிக்கடி நலம் விசாரித்தேன்
அவளுக்கு என் காதலை சொல்ல முயன்றேன்
அப்போதும் தோல்வியுடன் கைகோர்த்தேன்
அவள் மனதில் இடம் பிடித்தேன்

மாற்றங்கள் பல அவளிடம்
மாறியதற்கு நானே காரணம்
மனதிற்கு இது சந்தோசம்
மனதில் உள்ளவளுக்கு இது பெருங்கஷ்டம்

 
Leave a comment

Posted by on May 20, 2011 in En Kaadhal, Tamil Verses

 

என் காதல் (தொடர்ச்சி 2)

காலை முதல் என் கண்மணி ஏதும் உண்ணவில்லை
கேட்டதும் என் மணம் பொறுக்கவில்லை
உணவு கூடம் ஏதும் கண்ணில் படவில்லை
சிற்றுண்டி சாலை ஏதும் அரங்கில் இல்லை
 
தின்பண்டகூடம் கண்ணில் பட்டது உடனே
ஏதேனும் வாங்க எண்ணம் தட்டியது
வாங்கினேன் பழரசமும் நொறுக்கு தீனியும்
இது எந்தளவுக்கு என்னவள் பசியை போக்கும் ??
 
உள்ளே சென்று அமர்ந்தோம்
வாங்கிய உணவை உண்டோம்
கதைப்பது துவங்கியது
அது நிற்காமல் சென்றது
 
திரையில் ஓடும் படத்தில் நாட்டமில்லை
தேவதையின் மேலிருந்து பார்வை விலகவில்லை
அவளை கண்ட நொடிமுதல் பேச வரவில்லை
காதலை எவ்வாறு சொல்வேனென்று தெரியவில்லை
 
அவள் கண்களிலும் அதே ஒலி
அங்கேயும் அதே காதல் வலி
அவளுக்கு புரிந்து விட்டது என் மனமொழி
என்று கட்டுவேன் அவள் சங்குகழுத்தில் பொற்தாலி
 
திடீர் மாற்றம் அவள் முகத்தில்
கண்ணீர் மல்கியது அவள் கண்ணில்
குழப்ப அலைகள் அவள் மனதில்
ஏதோ சொல்ல வந்தன உதடுகள்
 
புரிந்தது அவள் வலி எனக்கு
ஆண்டவனுக்கு நன்றி இந்த வாய்ப்பிற்கு
காதோரம் நான் வினவினேன்
கணம் தாமதத்துடன் பதில் பெற்றேன்
 
இயன்றவரை அவளை பார்த்துக்கொண்டேன்
இன்றைக்கு காதலை சொல்வதை தள்ளிவைத்தேன்
வீடு சேரும்வரை அவள் காவலனாக இருக்க எண்ணினேன்
விருப்பத்துடன் சம்மதமும் பெற்றேன்
 
சேர்ந்து பயணித்தோம்
சேர்ந்தே இருக்க தீர்மானித்தோம்
அவள் வேதனையை குறைத்தேன் சிறிது
அன்று முதல் ஆகவில்லை புன்னகை அரிது
 
அவளிடம் வரை ஒன்றாய் சென்றோம்
அளவற்ற வலியுடன் விடை பெற்றோம்
சிறு பிரிவுதான் இதென எண்ணிக்கொண்டோம்
அவள் என்றும் எனக்கு வேண்டும்
 
சொந்த ஊரில் வந்து இறங்கினேன்
சோகத்துடன் வலம் வந்தேன்
சொற்ப வேகத்தில் நடந்து சென்றேன்
சற்பத்தை கண்டும் சறுக்காமல் கடந்தேன்
 
Leave a comment

Posted by on May 20, 2011 in En Kaadhal, Tamil Verses

 

என் காதல் (தொடர்ச்சி 1)

உன்னை விட்டு வரவும் மனமில்லை
உன்னுடன் சேர்ந்து இருக்க நேரமுமில்லை 
என் நடையில் உயிர் இல்லை
உன்னை சுற்றியே வருகிரதேன் எண்ண அலை  
 
 வந்து சேர்ந்தேன் என்னிடத்திற்கு
வர துடித்தேன் உன் அருகிற்கு
காத்திருந்தேன் உன் பதிலுக்கு
நான் அனுப்பிய குருஞ்செய்திகளுக்கு
 
மனதளவில் உன்னுடன் சேர்ந்துவிட்டேன்
காதலை உன்னிடம் சொல்ல துடித்தேன்
உன் அழைப்புக்கு ஏங்கி தவித்தேன்
உன் குரலுடன் தின வாழ்வை தொடங்கினேன்
 
வந்தது உன்னிடமிருந்து குறுஞ்செய்தி
இருந்தது அதில் எனக்கோர் பேரதிர்ச்சி
உன் மாமன் மகளின் திருமணம்
நீ செல்ல வேண்டியது அவசியம்
 
இருப்பேனா நான் உன் குரல் கேளாமல்
இருப்பாயா நீ என்னுடன் கதைக்காமல்
எப்படி இருப்போம் நாம் காதலை பகிர்ந்துகொள்ளாமல்
முடியாது செல்வதை தவிர்ப்பது உன்னால்
 
இரு தினங்கள் பல யுகங்கலாயின 
ஈராயிரம் முறை அலைபேசியை கண்கள் நோக்கின 
உன்னுடன் பேச உதடுகள் துடித்தன 
உன் அழைப்புக்கு ஏங்கி உயிர் அணுக்கள் ஏங்கின
 
மூன்றாம் நாளும் இல்லை உன் அழைப்பு
என்றும் இப்படி இருந்ததில்லை என் பிழைப்பு
பெருகிக்கொண்டே செல்கின்றது தவிப்பு
அனைத்துக்கும் நான் தரும் பதில் ஒரு முறைப்பு
 
ஏன் உன் மேல் எனக்கு இவ்வளவு பாசம்
என்றும் என்னுள் இருந்ததில்லை இத்துனை நேசம்
நித்தமும் கோருது என்மனம் உந்தன் காதல் வாசம்
எக்கணம் மீண்டும் வீசும் உந்தன் சுவாசம் 

அலைபேசி ஒலித்தது
படபடப்பு பெருகியது
புதிய என் ஒன்று அதில் தெரிந்தது
மனம் ஏமாற்றத்துடன் கசந்தது

 
என் மனம் அங்குள்ள உன்னை சுற்றி
உன் உள்ளம் எண்ணுது என்னை பற்றி
எப்போது வரும் உந்தன் அழைப்பு
அப்போது அடங்கும் நம் தவிப்பு 

அழைத்தாய் அலைபேசியில் நீ
பகிர்ந்ததாய் அமுதத்தை நீ
அடங்கியது நம் தவிப்பு
மலர்ந்தது உதடுகளில் பூரிப்பு

 
காலையில் காண்பது உன் புகைப்படம்
விழித்ததும் செவியில் தேன்பாயும்
தினமும் இது நிகழும்
என் சுவாசம் உள்ளை வரை தொடரும்
 
மீண்டும் உன்னை காண எண்ணினேன்
மழுப்புதலாய் உன்னிடம் சொன்னேன்
துள்ளி குதித்தாய்
தயங்காமல் சம்மதித்தாய்
 
எங்கு சந்திப்பது நாம்
எழுபது நிமிடங்கள் விவாதித்தோம்
ஒரு முடிவிற்கு வந்தோம்
சந்திக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தோம்
 
அதே சத்யம் அரங்கின் வாசல்
மனங்களில் சந்திக்கும் ஆவல்
தூக்கமின்றி சிவந்த கண்கள்
இன்றாவது சொல்வேனா உன்மேலுள்ள காதல்???
 
சந்திக்கும் கணம் நெருங்கியது
உள்ளத்தில் கணம் கூடியது
நொடி நொடி கண்கள் அலைபேசியை கண்டது
உன் பாச சங்கேதங்கள் வந்து சேர்ந்தது
 
கண்டேன் உன்னை நான்
கண்களில் கோடி பிரகாசம் தான்
உன் கரம் பற்றினேன்
உன்னுடனே இருக்க தவித்தேன்
 
அழைத்து சென்றேன்
உன்னை மனதால் அனைத்து கொண்டேன்
காதலை சொல்ல வந்தேன்
சொல்ல மறந்து தவித்தேன் ………………..தொடரும்
 
Leave a comment

Posted by on May 19, 2011 in En Kaadhal, Tamil Verses

 

என் காதல் !!!!!

என் வாழ்வில் மலர்ந்தது மொட்டு
என் மனதில் பறந்தது சிட்டு
உன் கண்ணிமை அழகிய பட்டு
எங்கு செல்வாய் நீ என்னை விட்டு

செங்கமலம் போல் நீ மலர்ந்தாய்
சேரவேண்டும் உன்னுடன் என தவிக்கவைத்தாய்
உனது ஓர விழியில் என்ன கிறங்கவைத்தாய்
பாசத்தில் என் தாயை மிஞ்சிவிட்டாய்

வெட்கி நீ தந்த புண் சிரிப்பு
என்னுள் தொடங்கியது பரிதவிப்பு
என் மனம் தூணாய் நிற்கும் இரும்பு
உன்னை தேடி ஆனேன் நான் வெறும் துரும்பு

என்னை தேடி நீ வந்தாய்
என்னுள் வந்து குடி கொண்டாய்
கண்களிலே காதலை சொன்னாய்
என் கண்ணிமையாய் நீ ஆணாய்

தினமும் நம் கண்கள் சந்திக்கும்
கண் பார்வையிலே காதலை பரிமாறும்
என்றும் நம் உள்ளங்கள் அரவணைக்கும்
உன்னை காண என் மனம் ஏங்கும்
கண்டபின் உன் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்

கண்களிலேகாதலை பகிர்ந்தது
உள்ளத்தில் நேசம் உணர்ந்தது
நம்மை சூழ்ந்த உலகம் மறந்து
சிறகற்றே பறந்தோம் நாம்
சுவர்க்கத்தில் திரிந்தோம் தினம் தினம்

உன்னை காணாது உறக்கம் இல்லை
என்னை காணும்வரை உன்னுள் புன்னகை பூப்பதில்லை
நம்முள் இருப்பது வெறும் ஈர்ப்பில்லை
இது தன நம் காதலின் அழகிய தொல்லை

வருடம் ஒன்று சென்றது
நான் விடை பெரும் நேரம் வந்தது
மனதில் கலக்கம் சூழ்ந்தது
உன்னடுன் இருக்க மனம் ஏங்குது

கண்ணீருடன் நீ வழி அனுப்ப
என் கண்கள் முழுதும் நீர் நிரம்ப
என் கால்களின் நடை தயங்க
விடை பெற்றேன் வெற்றுடம்போட…

தனிமையில் தவித்தோம்
பிரிவால் வாடினோம்
பாசத்திற்கு ஏங்கினோம்
மீண்டும் காணவேண்டுமென துடித்தோம்

நொடிகள் யுகங்கலானது
பசியும்மறந்து போனது
கணம் கணம் காதல் வளர்ந்தது
மீண்டும் உன்னை காணும் நாள் வந்தது

வந்தன என் தேர்வு முடிவுகள்
காத்திருந்தன எனக்காக உன் விழிகள்
ஓடோடி வந்து கண்டாய் என் மதிப்பெண்கள்
பின்னரே கண்டாய் உன் உறவினர்களின் பெயர் பட்டியல்

உன் ப்ரியனின் பெயர் கண்டாய்
உள்ளம் குளிர மனமகிழ்ந்தாய்
என் வருகைக்காக காத்திருந்தாய்
உன் மணாளன் முதலாவதாக வரவில்லை என கண்ணீர் விட்டாய்

தாங்குமா இத்துணை காதல் என் மனம்
கண்கலங்கி நின்றேன் அக்கணம்
உன்னை கண்ட பூரிப்பில் மலர்வனம்
துள்ளி திரிந்தது என் வருகையால் உன் பாசமனம்

இன்றொரு நாள் தான் நம் கண்கள் சந்திக்கும்
பின்நெத்த்னை காலம் உள்ளங்கள் பரிதவிக்கும்
நாளையை எண்ணி நாம் வருந்தவேண்டாம் இக்கணம்

பரிமாறிகொள்வோம் பாசத்தை நாம்

உன் கண்ணீரில் கலங்கினேன்
என்னுடன் அழைத்து செல்ல எண்ணினேன்
வாழ்கையை சிறிது சிந்தித்தேன்
சொந்த காலில் நின்றபின் என்னவள் ஆக்கிகொல்வேன்

கிடைத்த கால்லூரி பல தொலைவு
என் மனதில் இல்லை நிறைவு
எப்படி தாங்குவோம் இப்பிரிவு
நீ இல்லை என்றல் நான் பூணவேண்டும் துறவு

உன்னை காண ஓடோடி வந்தேன்
உன் தெருவில் நாய்போல் அலைந்தேன்
என் காதலியின் கடைக்கண் பார்வை கிடைத்தது
என் உள்ளம் சந்தோஷத்தில் ஆட்டம் போட்டது

கல்லூரி செல்ல மனம் இல்லை
உன்னை பிரிந்து போக விருப்பமில்லை
ஏன் ஆண்டவா எங்களுக்கு இந்த அன்பு தொல்லை
நீ இன்றி என்றும் நான் இல்லை

சென்று சேர்ந்தேன் கல்லூரியில்
என் தூக்கம் முழுதாய் போனது அன்று முதல்
எப்படி இருக்கிறாள் என் தேவதை
நான் தந்துவிட்டேன் உன்னக்கு பெரும் சித்திரவதை

பிடிப்பில்லாமல் வழக்கை சென்றது
நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது
நட்பில் மகிழ்ச்சி கொஞ்சம் கிடைத்தது
இருப்பினும் அது என் நெஞ்சை சிறிதே நிரப்பியது

வாழ பிடிக்கவில்லை
படிப்பிலும் நாட்டமில்லை
ஒரு பக்கம் கல்வி கடன்
மறுபக்கம் பெட்ட்றோரின் கனவுத்தொல்லை

மனதால் சிரித்து கடந்தன பல திங்கள்கள்
தினமும் என் பாதையில் ஆயிரம் முற்கள்
அங்கு வாடுகிறாள் அழகிய திருமகள்
அவளை காண நித்தம் ஏங்கின என் கண்கள்

ஊருக்கு சென்றேன் வழியில்
என் தேவதையை கண்டேன்
அவள் விழியில் காதலை கண்டேன்
மன நிறைவுடன் கல்லூரிக்கு வந்தேன்

மூன்று வருடங்கள் சென்றது
அவள் கல்லூரி செல்லும் நேரம் வந்தது
நாங்கள் என்றாவது சந்திக்கும் வாய்ப்பும் பறிபோனது
என் காதல் என் கை விட்டு சென்றது

ஏக்கத்தில் இருந்தேன் நான்
ஏங்கி தவித்தாள் அவள்
தினமும் கண்ணீருடன் எங்கள் கண்கள்
நான் அவளை மீண்டும் அடைவது எந்நாள்??

என்னை இன்னொருத்தி விரும்பினாள்
பாசத்தை பரிமாறினாள்
என் ஏக்கத்தை குறைக்க முயன்றாள்
அவள் பக்கம் என்னை திருப்பி கொண்டாள்

அக்கணம் செய்தேன் என் காதலுக்கு துரோகம்
என்றும் இது மன்னிக்க முடியாத குற்றம்
மனதில் ஒருத்தி இருக்க
இன்னொருத்திக்கு காதலனாய் நடிக்க
முடியவில்லை என்னால்
வெதும்பி போனேன் ஒவ்வொரு நாள் 

மீண்டும் அவளை சந்திப்பேனா
என் தவறை கூறி மன்னிப்பு கேட்பேனா??
கேள்விகள் மட்டும் என்னிடம்
பதில் இல்லை யாரிடமும்

விரக்தியின் உச்சதிருக்கு சென்றேன்
வாழ்கையை வெறுத்து நின்றேன்
எனக்கு தண்டனையை தேடினேன்
உயிர் துறக்க எண்ணினேன்

முயன்றேன் உயிர் துறக்க
அவள் இன்னும் காத்திருக்கிராளா எனக்காக
ஏங்கியது என் மனம்
பலிக்கவில்லை என் பிரயத்னம்

மீண்டும் வாழ்வில் வெற்றிடம்
இதை போக்க அவளால் மட்டும் தான் முடியும்
முதலின்என் இன்னோர் காதல் நடிப்பை நிறுத்தவேண்டும்
வந்தது அதற்கான கணமும்

சில பொய் கூறினேன்
என்னை காதலித்தவளிடம்
விலகி வந்தேன்
இவளையும் கண்ணீரில் வாடவைத்தேன்

நான் செல்லும் பதை எனக்கு தெரியவில்லை
எங்கு செல்கிறேன் என்றும் புரியவில்லை
கால் போகும் போக்கிலிருந்து நான் மாறவில்லை
இனிமேல் நான் வாழ்வதில் அர்த்தமும் இல்லை

கல்வி முடிந்தது
மீண்டும் தேடிச்சென்றேன் அவளை
எங்கும் அவள் காணவில்லை
எங்கு இருக்கிறாள் என்றும் தெரியவில்லை

பணியில் சேர்ந்தேன்
அலை உலகில் தினம் தினம் தேடினேன்
எங்கும் தெரியவில்லை அவள் முகவரி
என்னுள் குறையவில்லை காதல் வெறி

அயல் நாடு சென்றேன்
அவள் எண்ணங்களில் வாடினேன்
தனிமை என்னை சூழ்ந்தது
ஏக்கம் வாட்டி எடுத்தது

எதிலும் நட்டமில்லை எனக்கு
நீ மட்டும் போதும் இப்பிறவிக்கு
எங்கிருக்கிறாய் என் மனமே
வந்து என்னை சேரடி பொன்மேகமே

உயிர் துறக்கவும் முடியவில்லை
நீ எனக்கு கிட்டும் சுவடுகளுமில்லை
எதற்கு இனிமேல் எனக்கு இந்த வாழ்கை
ஆண்டவனுக்கும் என் மேல் கருணை இல்லை

நாடு திரும்பினேன்
மீண்டும் என்னவளை தேடினேன்
ஒரு முறையாவது காண துடித்தேன்
உயிரை விட சென்றேன்

மீண்டும் தோல்வியில் திரும்பினேன்
என்றும் போல் கணினியை தட்டினேன்
என் அதிர்ஷ்டம் அன்று வந்தது
வலை கடலில் அவளை கண்டேன்

அனுப்பினேன் நட்பு அழைப்பிதழை
தினம் தினம் தேடினேன் அவள் பதிலை
வாரம் ஒன்று ஆகியும் தகவல் இல்லை
யோகம் கிட்டியது ஒரு நாள் பிற் காலை

அவளுடைய மின்னஞ்சல் வந்தது
என் வாழ்விற்கு அர்த்தம் தந்தது
மீண்டும் மனதார சிரிப்பு வந்தது
என் தேவதை எனக்கு கிட்டியது

காதலை அன்றே சொல்ல எண்ணினேன்
தவிப்பால் ஏங்கினேன்
சொல்ல தாமதித்தேன்
அவளுடன் நெருங்க ஆரம்பித்தேன்

கைப்பேசி என்னை எனக்கு தந்தாள்
அவள் கல்லூரியில் சந்தித்த இன்னல்கள் கூறினாள்
என்னிடம் ஆறுதல் தேடினாள்
எனக்கு நெருங்க வாய்ப்பு தந்தாள்

தினம் தினம் தவிப்பு பெருகியது
எங்களின் நட்பு கூடியது
உள்ளங்கள் நெருங்கியது
நான் அவளை காணும் நாள் வந்தது

சந்தித்த கணம் சிலை ஆனேன் ஒரு நொடி
அவள் கண்களில் என் மேலுள்ள காதலை கண்டேன் அந்நொடி
இன்னும் நெருங்கினோம்
என்றும் பிரிவே இருக்கக்கூடாதென எண்ணினோம் …

சத்யம் திரையரங்கின் வாசல்
அன்று அது நம் காதலுக்கு அமைந்த சொர்க்கவாயில்
சுட்டெரித்தது வெய்யில்
பொங்கி மலர்ந்தது உள்ளத்தில் தேங்கி இருந்த காதல்

அமர்ந்தேன் நான் சற்று விலகி
கண்டுகொண்டே இருந்தேன் மனம் உருகி
சுட்டெரித்தாய் உன் கருவிழிகளை திருகி
உன்னருகில் சேர்ந்தேன் மனமறுகி

திரையில் ஓடியது காதல் காவியம்
நம் மனதில் படர்ந்தது காதல் ஓவியம்
இனி உன்னை அடைவேன் வென்று என் சாவையும்
உனக்கு நான் கட்டுவேன் மாங்கல்யம்

சேர்ந்திருந்தது சில மணி நேரம்
அதில் கண்டோம் ஆயிரம் பரவசம்
உன்னை விட்டு செல்ல மானமில்லை அக்கணம்
உன்னை அடைந்து தீருவதே என் புருஷ லக்ஷணம்

கண்கள் பரிமாறிய காதல்
நமக்குள் இல்லையடி மோதல்
நீ இல்லைஎனில் எனக்கு சுகம் சாதல்
அன்பை பகிர்ந்தன உன் கண்கள்

திரையை காண வில்லை நான்
உன்னை மட்டுமே கண்டுகளித்தேன் தான்
உன் சுவாசம் எனக்கு தேன்
அதை என்றும் பருகவேண்டும் நான்

வழியனுப்பி வைத்தேன் உன்னை வீட்டிற்கு
நான் சென்றேன் என் இடத்திற்கு
செல்லவேண்டும் உல்லாச பயணத்திற்கு
நண்பர்களுடன் அன்று ஊட்டிக்கு

வழியெங்கும் உன் எண்ணங்கள்
விழிமுழுதும் உன் சின்னங்கள்
உன் அழகை கண்டு வருடிய மல்லிகை மலர்கள்
நாம் தானடி உலகின் மிகச்சிறந்த காதலர்கள் …………….( தொடரும்)

 
2 Comments

Posted by on March 2, 2011 in En Kaadhal, Tamil Verses